Sunday 4 May 2014

காலை - பிப்ரவரி 2





இரவின்  விளிம்பில் 
துவங்குகிற வைகறை
முதலில் கூவும் சேவலின் கொண்டையில்
சிவப்பு நிறமாக மலர்கிறது
அதன் குரலில் விரிகிறது
மெல்லப் பரவி இரவுடையின் மடிப்புக்களில்
புரளத் துவங்கி
இமைகளில் வந்தமர்கிறது
'
அதற்குள் விடிந்து விட்டதா' என்று
தன்னுள் சலித்து தோள் நெகிழுத்தும் கரங்களில்
கனவாகவும் நனவாகவும் அதிகாலை துவங்குகிறது .

No comments: