Sunday 4 May 2014

காலை - பிப்ரவரி 12





சந்தேகமின்றி பால்யத்தைத் தேடுகிறவர்களாகவே
பலவேளைகளில் நாம் இருக்கிறோம்.
அந்த நாட்களின் அம்மா தனக்கிட்ட முத்தங்களை
அவளுக்கென மீட்டுருவாக்கி 
 
தன்னுடைய இரகசியப் பேழையில்
சேகரித்த படியே இருக்கிறாள் ஒருத்தி.
அங்கிருந்து காலத்தின் நெடுந்தொலைவு
வந்துவிட்டவள் இவள்
என்றபோதும்
தன் சிறிய விழிகளின்  ஆழத்தில்
நினைவிலிருக்கும் கடந்த காலத்திற்கும் அப்பால்
தன்னை இருத்திக் கொள்கிறாள்.
பலதும் பலவாக மாறிவிட்ட இந்நாளில் 
அந்த முத்தத்தின் ஈரத்தைத்
தேடுகிற தினமாக இன்று அவளுள் வாசம் பரப்புகிறது .
%

No comments: