Sunday 4 May 2014

காலை - பிப்ரவரி 16




இந்த தினத்தின் திறவுகோல்
தன்னிடத்தில் இல்லையென்பதை உணர்ந்தவள் அவள்
அதிகாலையின் பறவையொலி கேட்டு
விழிப்பு வந்துவிடும்
எழுந்து ஆகப்போவது ஒன்றுமில்லை
கண்களை மூடிப்படுத்திருப்பாள்
அது ஒரு காலம்
என்று சொல்லும்படி  ஓயாது சுழன்றிருக்கிறாள் 
வயல்வெளிகளில்
காடுகழனியில்
ஆடுமாடுகளோடு
குழந்தைகளோடு தன் பொழுதைப் பகிர்ந்திருந்தவள்
இப்போது முதுமையின் தனிமைக்கு
தன்னை ஒப்புக்கொடுத்திருக்கிறாள்
தன்னுடைய இயங்கு பருவத்தின் சுழற்சியில் 
மனம் லயித்திருக்க
தனதிந்த  தினத்தின் திறவுகோலாக
ஓய்வு நாளிலிருக்கும் தன் மக்களிடமிருந்து
தொலைபேசி அழைப்பை
எதிர்பார்த்திருந்தாள்.
%


Courtesy : Painting -Ajayan Chalissery

No comments: