பாவாடை நாடாவை
முடிச்சிடத் தெரியாத சின்னவள்
ஊரோரப் புளியமரத்தில்
தூக்கில் தொங்குகிறாள்
ஊரோரப் புளியமரத்தில்
தூக்கில் தொங்குகிறாள்
ஊர் பதறுகிறது
அதிகாலையில் இப்படியொரு
செய்திவரும் என அவள் அம்மா எதிர்பார்த்திருக்கவில்லை
பள்ளிவிட்டு வழக்கமான நேரத்திற்கு வீட்டுக்கு வருகிறவள்
முதல் நாள் மாலையிலிருந்து காணவில்லை
எங்கெங்கோ தேடி
காவல் நிலையத்தில் புகாரளித்து
அதிகாலையில் இப்படியொரு
செய்திவரும் என அவள் அம்மா எதிர்பார்த்திருக்கவில்லை
பள்ளிவிட்டு வழக்கமான நேரத்திற்கு வீட்டுக்கு வருகிறவள்
முதல் நாள் மாலையிலிருந்து காணவில்லை
எங்கெங்கோ தேடி
காவல் நிலையத்தில் புகாரளித்து
இரவெல்லாம்
தொலைபேசியில் அழுது
தெருவெல்லாம்
அலைந்து
விடியற்காலை
வீடு திரும்பி தலை சாய்த்தவளின்
காதில் விழுகிறது
காதில் விழுகிறது
சாவின்
அபாயமறியா
உடலறியாச் சிறுமியின் உடல் கிழிந்து
ரத்தம் பெருகி
கயிற்றில் உயிர்வழியும் மகளை
உடலறியாச் சிறுமியின் உடல் கிழிந்து
ரத்தம் பெருகி
கயிற்றில் உயிர்வழியும் மகளை
எங்ஙனம்
காண்பாள் அவள் .
%
No comments:
Post a Comment