Sunday 4 May 2014

இரவு -பிப்ரவரி 8






பகலின் முடிவில்
விரிந்து கிடக்கும் கனவினை
ஏந்தி வருகிறது வானம்
நட்சத்திர சிதறலில் குவிந்த அவள் 
திசைகளை உடுத்திய ஒருவனை
மனம் கொண்டிருக்கிறாள்
அவன் கனவினையும்
அவளே  உடுத்திக்கொள்கிறாள்
பின்பு முடிவில்லா
வண்ணங்களைப் பூசிவிடுகிறாள் 
பரவசத்தின் பகிரப்படாத சொற்களை
முத்தங்களாக்கி
அவனின் கனத்தப் பொழுதுகளின் துயர்
அற்றுப் போகச் செய்கிறாள் .
%

No comments: