Monday 5 May 2014

மார்ச்-இரவு 2





நீண்ட விருந்தோம்பலுக்குப் பின்பு
வீடு திரும்புகிறாள்
பிள்ளைப் பேற்றிற்கான இடைவெளியில்
தன் இருப்பின் அடையாளங்களை
தொலைத்துவிட்டிருக்க வாய்ப்புள்ள
அந்த வீட்டை இட்டு நிரப்ப வேண்டியிருக்குமா
அல்லது சாவான பாவத்தைச் செய்ததற்காக
கனமான மன்னிப்பை கோரும் அவனை
எதிர்கொள்ளவேண்டியிருக்குமா
அல்லது பிள்ளைக்கான முத்தம் வழியே
இதுவரையில் அவனிடமிருந்து பகிரப்படாத
பிரியமான சொல்லொன்று கிடைத்துவிடுமா
என்பதையெல்லாம் நினைத்தபடியிருக்கும்
இரவுப்பயணம்
கற்பனைகளின் கூடாரம் .
%


Courtesy : Painting- Zamy Stenovitz

No comments: