Sunday 4 May 2014

இரவு -பிப்ரவரி 17





சந்தித்துக் கொண்டார்கள்
வேறுவேறு கதவினைத் திறந்து
வாழ்வினுள் நுழைந்தவர்கள் அவர்கள்

எதிர்கொண்டார்கள்
ஏற்றுக்கொண்டார்கள்
இப்போது
அவர்களின் காலம் நீரலைகளினால் ஆனதுபோல
அசைந்தாடும் குளிர்மையாக இருக்கிறது
சிலசமயம் நதியின் சிற்றலையாகத் தளும்பும்
சிலசமயம் கடலின் பேரலையாக எழும்பி அமிழும்
எக்கணமும்
கரும்பாறைகளுக்கு மத்தியில் ஊற்றுப் பிடிக்கும்
நீர்க்கசிவினை மனதில் ஏந்தியிருந்தனர்
பனித்துளியென துளிர்த்திருக்கும்
அவர்களின் காதலில்
இரவு புரள்கிறது .
 %
 Courtesy : Painting - Pallavi Walunj

No comments: