Wednesday 28 August 2013

அறிதல் . . .



மஞ்சள் ஒளி படர்ந்த
என்
நிலத்தில்

விதைத்த உனதன்பு
வேர்களால்
என்னைச் சுற்றுகிறது

என்
ப்ரியங்களில் இருந்து
துளிர்க்கும் உன் கிளைகளில்
அடையும் பறவைகள்

சுதந்திரத்தின்
இசையை இசைக்கும் போது
அறிவதில்லை

தியாகத்தின் மொழியை .

No comments: