Tuesday 6 August 2013

அவிழ்த்தல். . .


இப்பொழுதெல்லாம்
இப்படியிருக்கத்தான் முடிகிறது என்னால்

ஒரு பூவைப் பறிப்பதற்கோ
அதனைத் தொடுப்பதற்கோ அவகாசமற்று
கடந்து விடுகின்ற மாலைப் பொழுதுகளை

அதிகாலையில்
மலர்ந்து உதிர்ந்து கிடக்கின்ற பூக்கள்
நினைவூட்டுகின்றன

பகலிலும்
பின்தொடர்ந்த அந்தியிலும் சூடப் படாத
பூக்களால் நிரம்பிக் கிடக்கிறது முற்றம்.

No comments: