Sunday 11 August 2013

ரகசிய கணங்கள்-2 :




என்னை முத்தமிடு

பூ இதழினுள் உருளும் பனித்துளியின்
நகர்த்தல் உணர்த்து

பசுங்கிளையில் கொம்பிலமர்ந்து
சிறகுலர்த்தும் பறவை போல காத்திரு

மூடிய பூ இதழ் திறக்காமல்
வசந்தகாலம் துவங்காது என்றறியாத
உன்  நிலையை
நான் என்ன செய்ய .

No comments: