Tuesday 6 August 2013

தனித்தலையும் பறவை. . .




அந்தரங்கத்தின் தனிமை
புகுந்துகொண்டது
அவனைச் சந்தித்த பொழுதுகளில்

எவ்விதமாயும்
வெளிப்படுத்த இயலாக் காதலோடு
நதியிடம் வேண்டினாள்
தலைவனிடம்
தன் சொற்களைக் கொண்டு சேர்ப்பிக்கும்படி
கடந்து சென்றது நதி

காற்றிடம் கேட்டாள்
தன் காதலைக் கொண்டு சேர்ப்பிக்கும்படி
விலகிச் சென்றது காற்று

பறவைகள்
வெகு தொலைவில்
உயரப் பறந்து கொண்டிருந்தன

நதியின் கூழாங்கற்களாய்
காலம்
உருண்டோடிக் கொண்டிருக்கிறது

வடிவமற்ற சொற்களில்
காதல் சிதறிக் கிடக்கிறது
வனத்தில்
தனித்தலையும் பறவையைப் போல
.
— with Bhairava Shivabaraty

No comments: