Friday 16 August 2013

மனப் பறவை . . .


நம்மைச்
சூழ்ந்திருக்கும் பனி விலகி
நிகழ்கின்ற சந்திப்பில்
உன்னை
எதிர்கொண்டு அணைப்பதற்காகவே
தேங்கிக் கிடக்கின்ற
அந்தரங்கத்தின் முத்தம்
நீண்டதொரு கடல் பயணமொன்றில்

இளைப்பாறச்
சிறு நிலம் தேடும்
பறவையைப் போல் தவிக்கின்றது .

No comments: