Tuesday 6 August 2013

மீண்டெழுதல். . .



நான் பெண்ணாய் பிறக்கும்போது
பறித்துக் கொண்டார்கள்
அல்லது
செயலிழக்கச் செய்தார்கள்
கால்களை
கரங்களை
கண்களை
செவிகளை
நாவை
புலன்களை
மேலும்
பார்க்கவியலாத சிறகுகளை
பெண்ணாய் பிறந்தேன் எல்லா உறுப்புகளோடும்
நீரை அருந்தினேன்
காற்றை சுவாசித்தேன்
நெருப்பை விழுங்கினேன்
நிலத்தில் புதைந்தேன்
வானத்தில் மிதந்தேன்
ஒன்றாய் நூறாய் ஆயிரமாயிரமாய்
பெருகி போராடிக்கொண்டிருக்கிறேன்

No comments: