Saturday 17 August 2013

இதற்குமுன்






இதற்கு முன்
இவ்விதமாக யாரையேனும்
ஆக்கிரமித்திருந்தேனா

ஒரு  புயலைப்  போல
யாவற்றையும்  புரட்டிப்போடும்
அன்பைப்  பொழிந்திருந்தேனா

இத்தனை  பிரியங்களை  சொற்களாக்கி
உனக்குப்  பரிசாக  தருவேனா

உன் பிரிவை
வாழ்வின்  துயரமான  தருணமெனக்
கருதித்   தவிப்பேனா

நம் சந்திப்பை
காலத்தின்  மிகப்பெரிய  அதிர்ஷ்டம்
என்று  சொல்லி  மகிழ்வேனா 

உண்மையில் 
 உனது  பிரிவும்  சந்திப்பும்
என்னுள்  நிகழ்ந்திருக்கிறதா

No comments: