Tuesday 6 August 2013

வெட்கம். . .


இந்த
வானத்திலிருந்து

பூவெனச்
சாரல் பொழிகிறது

பெரும் காற்றோடு
முத்து முத்தாய் நீரைச் சொட்டுகிறது

பனிக்கட்டியாய்கூட
பொழிந்து
தலையில் குட்டுகிறது

எப்படியும் வந்து
நிலத்தை ஈரமாக்கும்
இந்த மழை

எப்போது வரும் என்பது
அறியவியலாப் புதிர்

உன்னை நினைத்தாலே
இந்த நிலத்தை
ஈரமாக்கும்
உனக்கு முன்பு

இந்த
வானமும்
அது
சொரியும் மழையும்
வெட்கப்படாமல் வேறு என்ன செய்யும் .

No comments: