Tuesday 6 August 2013

என்னை வியக்கிறேன் ...



அன்றைய இரவில்
கிளைகளில் உதிரும் வெறுமையை உடுத்தியிருந்தேன்
துகளாகச் சிதைக்கப் படுவதில் எனக்குச் சம்மதமில்லை

வெளிர்மேகம் நீல நிறம் வேண்டிச் சூழ்ந்திருக்க
விடாப்பிடியாய் இறுகிக் கிடக்கும்
பாறையைத் துளைத்து நீர் எடுத்து விடும் தேரை இவள் மனம்

என்பதாலும்
இத்தனைக் காதலாய் கசிந்துருகுகிறாளோ.

No comments: