Wednesday 21 August 2013

காட்டுத் தீ. . .



காடுகளை அறிந்தது
மரங்களாக
நீரூற்றுக்களாக
விலங்குகளாக
மேடுபள்ளங்களாக
என்றாலும்
காடுகள் புதிர்களால் நிரம்பியது
 

காடுகளுக்குப் பாதைகள் இல்லை
நெருப்புக்கும்கூட

தீ
நகர்வதற்கான ஒரு பாதை
இந்த நிலத்தில்
இந்த வானத்தில் இல்லை

பாதைகள் நேராகச் செல்லும்
வளைந்து வளைந்து செல்லும்
சட்டென்று இடது புறமாகவோ
பட்டென்று வலது புறமாகவோ
அல்லது
திரும்பிச் செல்வது போலவோ

பாதைகளின் பாதை இருக்கின்றன

ஒருபோதும்
இவ்விதிகளுக்குக் கட்டுப்பட்டதல்ல
நெருப்பென்னும் தீ

அது பரவி அழிக்கிறது
கசடுகளை
ஒவ்வாதவைகளை
தீமைகளை
இன்னும் பலவற்றை
அன்பையும் காமத்தையும் தவிர.

No comments: