Tuesday 6 August 2013

காலடியின் நீருற்று . . .



நிலமெங்கும் நீரூற்றுகள் புதைந்து கிடக்கின்றன
தாகம் கொண்டவர்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள்
நீரூற்றுகளைத் தேடி

நீரூற்றுகளை எவ்வாறு அடைவதென்பதையும்
தங்கள் தாகத்தை
எவ்வாறு தீர்த்துக்கொள்வது என்பதையும்
அறியாமல் இருக்கிறார்கள்
மேலும்
நிலத்தை துளைக்கும் கருவிகளை நம்புகிறார்கள்
அவற்றின் உதவியோடு
அளவற்ற சக்தியால் துளையிடுகிறார்கள்

அந்த நிலமோ
அவற்றுக்கு பதிலாக எதையும் தருவதில்லை

ஒரு நிலத்தின் நீரூற்றைக் கண்டடைவதற்கும்
ஒரு நிலத்தின் நீரூற்றைப் பொங்கச் செய்வதற்கும்
ஒரு நிலத்தின் நீரூற்றை ருசிப்பதற்கும்
ஒரு சொல் போதும் என்பதை அறியாதவர்கள்

நீரூற்று
ஒரு தாகம் கொணடவனுக்காக
பாதங்களுக்கு மேலாகக் காத்துக்கொண்டிருக்கிறது.

No comments: