Tuesday 6 August 2013

நதிக்கரையில் நிற்கும் புதிர். . .




நதிக்கரையில்
தனித்து விடப்பட்ட குடத்தைப் பார்க்கிறேன்
ஒரு தாயின் சுமை தூக்க முடியாத
இயலாமையால் இருக்கலாம்

காதலனுக்காய்

காத்திருந்ததின் சலிப்பாக இருக்கலாம்

கணவனின் துன்புறுத்தல் தாங்காமல்

ஆற்றில் விழுவதற்கு
துணைக்கு வந்ததாய் இருக்கலாம்

புதிதாக

நீர் சுமந்து பழக ஆற்றுக்கு வந்த
சிறுமியின் விளையாட்டாக இருக்கலாம்

ஒரு வெற்றுக் குடத்துடன்

நதிக்கரையில் நின்றிருக்கும்
என்னைப் பற்றி
யாருக்கு கவலை.

Courtesy : Painting - Diego Fazio,

No comments: