Saturday 1 June 2013

நினைவின் சுவை. . .



வண்டுகள் ரீங்காரிக்கும் இவ்விரவில்
அறியப்படாத சுவையொன்று
நாவில் ஊறியபடி இருக்கிறது

இரவுக்குப் முந்திய
பகல்
நலிவைத் தருவதாதாக இருந்தது

மழை பெய்து
குளிர்ந்த தினைச்செடிகள்
செழித்திருக்க
மலைச்சரிவில்
மூங்கிலின் நிழலும்
வெயில் படிந்த அவன் முகமும்
எனக்குள் விம்மியடங்குகின்றன

நீள்மலைத் தொடர் காட்டில்
உறங்காதிருக்கும்
வண்டுகள்
இசைத்துக்கொண்டிருக்கின்றன
நலிவின் பாடலை

இரவெல்லாம்
மூங்கிலைத் தாலாட்டும்
தென்றலின் பாதையை
துளையிடும்
வண்டுகள்

மழையில் நனைந்த
தினைச்செடிகளில் மலரும் சிரிப்பை
அவனிடம்
நினைவூட்டினால்தான் என்ன.

No comments: