Saturday 1 June 2013

கோடைகால ஆற்றங்கரையில். . .



கூழாங்கற்கள்
நிறைந்து கிடக்கும் ஆற்றுப்படுகையில்
பறவைகள் அமர்ந்திருக்கிற
மாலை வேளையில்
சந்தித்துக்கொள்கிறோம்

மீன்களுக்கென பறவைகளும்
புழுக்களுக்கென மீன்களும் காத்திருக்கையில்
கூழாங்கற்களோடு விளையாடிக்கொண்டிருக்கிறேன்

பாசிகள் மிதக்கும்
நீர்ச்சுழலை விலக்கியபடி மீன்கள் நீந்துகின்றன
பறவைகள் பறக்கின்றன

நீ விலகிச் செல்கிறாய்
என் சொல்லையோ
அல்லது
என்னையோ எடுத்துக் கொண்டு

உன் நிழலை என் நிலத்தில் விட்டுவிட்டு..

No comments: