Saturday 1 June 2013

எனக்கான ஆகாயம் …



மழைக்கால மாலைகளில்
தவறாமல்
மழை வந்துவிடுகிறது

குடைபிடித்துச் செல்வோர்
சாலைகளில் கடக்கின்றனர்
வாகனங்களின் விளக்குகள்
மங்கலாக ஒளிர்கின்றன

நிலவற்ற வானம்
எனக்கு மேலே விரிந்திருக்கிறது
மழையில் நனைந்த
அதன் சிறகுகளை உலர்த்திக்கொண்டு

காற்றில் அலையும்
என் ௬ந்தல்
ஆகாயத்தை வருடியபடி
மயங்கிக் கிடக்கிறது .

இந்த மழைக்கால
வானம்
வசந்தத்தை தரையில் இறக்கியபடி இருக்க

கிளையில் அமர்ந்திருக்கிறது
ஒரு பறவையென
என் காதல்

சூல்கொண்ட மேகம்
மெல்ல விலக
மழைக் காற்றில் நனைந்த
என்
சிறகுகள் அசையத் தொடங்குகின்றன

நான் மிதந்து கடக்கின்றேன்
எனக்கான வானத்தை..

No comments: