Tuesday 6 August 2013

மழையானவள் . . .



மழையை
தன் உடல் திறந்து பருகத் தொடங்குகிற
நிலத்தை
பூச்செடியினை நடும்போது
உணர்கிறாள் ஒரு பெண்

மெல்ல வலுக்கிறது
சாரல்

தன்மேல் படரும்
ஆண் வாசமென்று
வெட்கத்துடன் மலர்கிறது நிலம்

நிலமெங்கும் பாய்ந்தோடுகிறது
மழைநீர்

அப்போது
அவள்
தன் உடல் முழுவதும்
ஒரு கனவைச் சூடிக்கொள்கிறாள்

விதைகள் முளைவிடுகின்றன
பூச்செடிகளில் சில மொட்டரும்புகின்றன
நிலமெங்கும்
வண்ணத்துப் பூச்சிகள் வந்தமருகின்றன

கூடவே
மழை நின்றதும்
நிலம் தன் உடல் முடிக்கொள்ளும்

அவள்
தன் உடல் திறந்து பருகுவாள்
மழையென்னும் பேராண்மையை
பின்பு
மழையே தானாகிறாள்

courtesy : painting - Ilaiyaraja

No comments: