Saturday 14 September 2013

நீட்சி . . .



பனியில்
இரவு முழுக்க
நனைந்த மலர்போல்

குவிந்து கிடக்கின்ற
அன்பு
என்மேல் முத்தங்களாய்
பொழிகிறது

அதன் மூச்சுக்காற்று
இதமாய் என்னை வருட
மலராய் இதழ்கள் விரிக்கிறேன்

ஒருபுறம்
என் மகளுக்காகவும்

மறுபுறம்
மகளாகவும் .

No comments: