Saturday 14 September 2013

இசை வழியும் கதவு ...



வீட்டுப் பறவையின் கூச்சல் கேட்டு விழித்தெழுகிறேன்
மனம் பதறி கூடுகளைப் பார்வையிடுகிறேன்

தண்ணீர் வைக்கிறேன்
அவற்றைத் தேறுதல் படுத்தும் விதமாக

ஏதேனும் துயரம்
அணுகி விடாமல் காக்க நினைக்கிறேன்
சந்தூர் இசை வழியும்
அந்த அறையின் கதவு இன்னும் திறக்கப் படாமலிருக்கும்
தண்காற்று சுழன்றெழும்
கனவின் ரகசியத்தை இரையெனத் தூவுகிறேன்
சமச்சீரான வெட்டாந்தரையில் .

No comments: