உவந்து அவள்
தன்னை
ஒப்புக்கொடுத்த மற்றும் ஒருதினம்
அறியப்படாமல் கடல்மத்தியில்
தனித்திருக்கும் தீவில்
தகித்திருக்கும் சூரியவாசம் உணர்ந்தாள்
நிலத்தையும் வானத்தையும் பாடியபடி
பகலின் ஒளிர்வினை நினைத்து
மரக்கிளைகளுக்குள்
தனித்துறங்கும் பறவையைப் போல
அவள் மிதந்து செல்கிறாள் அந்த இரவுக்குள் .
courtesy : painting -Anna Bocek
No comments:
Post a Comment