Sunday 22 September 2013

அன்பின் நிலம் :



ஒரு பெண்
தன் எல்லாவற்றையும் ஒப்புக்கொடுக்கிறாள்
ஒன்றை உணர்த்த

பெண் ஒருமை
பன்மையும் ஆகிறாள்
திசையெங்கும் பரவுகிறாள்
சூரியனுக்குக் கீழே உழைக்கிறாள்
நிலவுக்குக் கீழேயும்

வெட்கத்தை அர்ப்பணிக்கிறாள்
வசீகரிக்கும் சொற்களில் வசப்படுகிறாள்
தயை மிகுந்த அணைப்பில் மயங்கி கிடக்கிறாள்
ஆயிரம் கரங்கள் விரித்து
உலகு புரந்தூட்டும் மாகாளி எனவும்
ஆவேச கணத்தின் கீறலில் கசிகிற ரத்தம் கண்டு
விண்ணோர் உணவு எனவும் களிகூர்கிறாள்

சூதுமிகு சூழலில் வெகுளி
விசைமிகு ஊற்றுப் பெருக்கில் நிலம்

சிலசமயம் காதலி
சிலசமயம் மனைவி
இன்னும் ஒரு சமயம் அம்மா
பிறகு கைதொழும் அம்மனும்
எப்பொழுதும் பலியாள்
அன்பைக் கொடுப்பதில் ஏற்பதில்
மிச்சம் ஒன்றும் இல்லை.
நன்றி : செம்மலர் - செப் -2013

No comments: