Wednesday 23 October 2013

பறவைகளுக்காக விதைப்பவன் :




அவன் தானியங்களை உற்பத்தி செய்பவன்
சேகரிப்பவன்
விதைக்கவும் அறுவடை செய்யவும்
நிலத்தைத் தேர்ந்திருந்தான்

தானியங்களை பலநூறு மடங்காகாய் பெருகப் பண்ண
அந்த நிலத்தோடு உடன்படிக்கை செய்துகொண்டான்
மழையென பொழியுமவன்
வருவோர் போவோருக்கெல்லாம்
முதிர்தானியத்தின் உணவையே பரிமாறினான்
மேலும்
அவன் விதைப்பது
பெயர் தெரியாத சின்னஞ்சிறு பறவைகளுக்காகவும் தான் .

No comments: