Wednesday 23 October 2013

மாயமொழி . . .



ஆயிரம் ஆயிரம் சொற்களை வாசித்திருக்கிறேன்
ஆயிரம் ஆயிரம் சொற்களை எழுத ஆசை

ஆயிரம் ஆயிரம் துரோகங்களைச் சந்திருக்கிறேன்
ஆயிரம் ஆயிரம் துரோகங்களைச் செய்ய ஆசை

ஆயிரம் ஆயிரம் பொறாமைகளைப் பார்த்திருக்கிறேன்
ஆயிரம் ஆயிரமாய் பொறாமைப்பட ஆசை

ஆயிரம் ஆயிரம் மரணங்களைப் பார்த்திருக்கிறேன்
ஆயிரம் ஆயிரமாய் சாக ஆசை

ஆயிரம் ஆயிரம் நல்லவர்களைப் பார்த்திருக்கிறேன்
ஆயிரம் ஆயிரம் நல்லவளாய் மாற ஆசை

ஆயிரம் ஆயிரம் குழந்தைகள் பெற்றவர்களைப் பார்க்கவேயில்லை
ஆயிரம் ஆயிரமாய் குழந்தைகள் பெற்றுக் கொள்ள ஆசை
அந்தக் குழந்தைகள்
அன்பின் மொழியால்
ஆயிரம் ஆயிரம் கவிதைகள் எழுதுவார்கள்.

No comments: