Wednesday 23 October 2013

மலர்தல்:



அதிகாலையில்
சூரியன் பட்ட முதல் பூ
எதுவாக இருக்கும்

வெயில் பொதுவான ஒன்றுதான்
என நினைத்திருந்தேன்

இளஞ்சூடு பாவும் காலை
சுட்டெரிக்கும் உச்சி
மாலை வெம்மை இதமென
மாறிக் கொண்டேயிருக்கும் வெயிலை
முத்தமிட வரவேற்கிறேன்

மின்மினிப்பூச்சிகளை சூடி
இரவு
ஒரு பறவையென பறக்கக் காத்திருக்கிறது
எனக்குத் தெரியாமல்

சூரியகாந்திகள் தோட்டத்திலிருந்து
நூறு பறவைகளாய்
வானத்தில் பறக்கத் துவங்க
இரவில் மலரும் பூக்கள்
இதழ் விரிக்கத் துவங்குகின்றன

பகலும் இல்லாத
இரவும் இல்லாத
காலத்தில் மலரும்
முதல் பூவென மலர்கின்றன
அவள் நிலத்தில் அது.

No comments: