Thursday 26 July 2012

கடல்…




குளமென  இருந்த
மனம்
நான்
வளர வளர
கடலெனவாகியது
என் குற்றமல்ல

சமுத்திரத்தைக்  கூட
அறிந்திட முடியுமென
கூறும்
நீ
என்னைக் கண்டு
கலைங்குவதேனோ

அருவியாய்
நதியாய்
வெளியெங்கும் திரிகிறாய்
சிறு பள்ளம்  கண்டு௬ட
 பாய்கிறாய்

நிறைவடையாமல்
பொங்குகிறாய்
என்னை  நோக்கி  நகர்கிறாய்

என்னோடு
கலந்தால்
என்னை  அறிந்து  கொள்வது
எளிதென

உனக்குச்  சொல்வதற்கு
ஒருவரும்
இல்லையா.

1 comment:

இராதே பக்கங்கள் said...

சிறப்பானக் கவிதை