Tuesday 17 July 2012

முடிச்சு …



மனம்
சொல்வதையெல்லாம்
கைகள்   செய்யுமா  என்பது  தெரியவில்லை

ஆடை அவிழும் போது
நீளும்  கரங்களும்

அன்பு  மிகும் போது
அணைக்கும்  கரங்களும்

ஒன்றாவெனவும்  புரியவில்லை

கைகளும்
மனமும்
வெவ்வேறா  என்பதையும்
அறிய  முடியவில்லை .


1 comment:

Ponnambalam kalidoss ashok said...

மனம் வழி கரங்கள் செய்யும் வசிய மந்திர செயல்கள் , என்றும்
அன்பும் மிக்குத்தான் செயல்படும்..சூழல் செய்யும் மாயம் எதுவோ , அது
மனம் நோக்கி, மனம் கரகங்கள் ஊடாக..இது ,அவன் அவள் மனம் சார்ந்து ..
போடும் முடிச்சுகளும் அவிழும் நேரமும் இதய கரங்கள் சார்ந்து ..
முடிச்சு--மனதின் மகிழ்சிக்கு ..