Monday 16 July 2012

மிதக்கும் மேகம்...

 
உன்னிடம்
பகிர்ந்து கொள்வதெற்கென
மேகத்தை ஏந்திக் கொண்டிருக்கின்றேன்
.
உன் நினைவின் போக்கில்
நகரும் அதைக் கட்டுப் படுத்த இயலாது
இம்முறையும் தவிக்கின்றேன்
.
நீர்த்துளிகளைச் சுமந்திருக்கும்
இந்த மேகத்திற்கு
கருணையென்பதே இல்லை
.
என்னை எரித்துக் கொண்டிருக்கும்
உன் மீதான
நினைவை
அணைக்காது நகைக்கின்றது
.
மின்னலை உதிர்க்கும்
உனது உரசல்களை
எனதுடல் தாங்காதெனினும்
.
பாலைவனத்தில்
உயிர்த்திருக்க மழை வேண்டித்
தவமிருக்கும் மலர்ச்செடியென
.
காத்திருக்கின்றது
அத்தருணத்திற்காக.

1 comment:

Ponnambalam kalidoss ashok said...

கவி வரிகள் + பொருள் உள்ள படம்..பெண்ணின் மன வேகம் , ஆகாய விமானமென ...
வண்ண வண்ண எண்ணங்கள்...மேகக்திற்குள்;அவள் அன்பு திவலைகள்..
காற்று என அவன் மேகத்தை நகர்த்த..எப்போது பெய்யும் ?...
குளிர் சூழல் வரும் தருணம் வரும் ...
காத்திருத்தல் ...பாலைவனம் கூட உயிர்பிக்க உதவும் போது..
நினைவை அணைக்க மட்டுமல்ல , அள்ளி .....
மிதக்கும் மேகம்..தளிர்க வேண்டிய தருணம் ...