Friday 13 July 2012

வண்ணத்துப் பூச்சியின் சிறகுகள் :



வண்ணத்துப் பூச்சிகள்தான்
இந்த பூமிக்கு நிறங்களைத் தருவதாக 
நம்பிக்  கொண்டிருக்கிறாள்  ஒரு  சிறுமி 

இறந்த 
வண்ணத்துப் பூச்சியின் சிறகுகளைப்  பார்த்தாள்
பின்பு 
வண்ணத்துப் பூச்சிகளற்ற
வீட்டுத்  தோட்டத்தைக் கற்பனைசெய்யத்  துவங்கினாள்

தனது 
சிறிய இறகுகளில் 
வண்ணங்களாய்
இன்பத்தைச்  சுமந்து  திரியும்  அவைகளை 
ஒரு நாளும் 
சந்திக்காமல்  இருந்ததில்லை  அவள் 

இதுவரையில் 
எத்தனை  எத்தனை வண்ணத்துப் பூச்சிகள்
மரணமடைந்திருக்கும் 
அந்த மரணம் 
எப்படி துயரப்படுத்தியிருக்கும் 

அவள் 
தன்னுடலில் 
மரித்துப்  போன வண்ணத்துப் பூச்சியின்  
சிறகுகளை பத்திரப்படுத்தினாள்.


1 comment:

Ponnambalam kalidoss ashok said...

இங்கு வண்ணத்துபூச்சி என்பது , பெண் என்ற உயிர்ப்பின் உணர்வுகளை பதிவு ...
தன் இன்பங்களை எல்லாம் ,சிறிய இறகுகளில் வண்ணங்களாய் இன்பத்தை- என்ற கவி வரிகளின் வழி..
சிறுமிக்கு மகிழ்ச்சி பேரலை..வண்ணத்துபூச்சிகளின் மரணம் என்பது , பெண்களின் வாழ்க்கை போராட்ட வலிகள்...
மரித்துப் போன வண்ணத்துப் பூச்சியின் சிறகுகளை பத்திரப்படுத்தினாள்---கடந்த பாதை, இனி செல்ல உதவும் ..என்ற நம்பிக்கையில் ...
வண்ணத்துப் பூச்சியின் சிறகுகள்---சிறகுள்ள வலிமை என்றும் வளத்தை நோக்கி ...