Wednesday 8 August 2012

காதல் வழி . . .




ஆற்றின்  கரைகளுக்கு
இடையில்
இருக்கின்றேன்

வெள்ளம்  என் மீது
புரண்டோடுகின்றது

தொண்டை  வறண்டு
தாகத்தில்  தவிக்கின்றேன்

கால்கள்
நீரில்  மிதக்கின்றன

ஆற்றின்  போக்கை
எதிர்க்க
இயலாமல்
மீனாய்  மாறுகின்றேன்

தப்பிக்க  இயலாது
இனி
நானும்

என்னிடம்  இருந்து
நீரும் .

No comments: