Monday 27 August 2012

பரிமாணம். . .



இசையென்றாய்
பாடலென்றாய் நல் அமுது என்றாய்
நிலவு என்றாய்
நீங்காத கனவு என்றாய்
கனவின் தேவதையென்றாய்
மலை என்றாய்
மலை முகடு என்றாய்
மலை முகட்டை உரசிச் செல்லும் மேகம் என்றாய்
மேகம் குளிர்ந்து பெய்யும் மழை என்றாய்
மழை பெருகி ஓடும் நதி என்றாய்
கடல் என்றாய்
கடலின் அலை என்றாய்
காதலின் நெருப்பு என்றாய்
என்றாய் என்றாய் என்றாய்
நான் மயங்கி சரிந்தேன்
பெண் என்பதை மறந்தேன்
நான் ஆதிசக்தி என்பதையும் மறந்தேன்.

No comments: