Sunday 12 August 2012

பெருந்துயில். . .





அவளது  பெருந்துயில்
கலைக்க  முடியாததாக  இருக்கிறது
திறக்கவியலா  வாசலைப்  போல

கனவுகளினாலும்
காதலின்  தீராத  நோவினாலும்
இரவு  விழித்திருந்த
அவளை  அதிகாலை  துயில்  போர்த்தியிருக்கிறது

உறக்கமும்
ஏக்கமும்   விழிகளில்  படர்ந்திருந்தது

காமனை  வேண்டிய  நாச்சியாராய்
அவளும்
கனவில்  அவனிடம்   நேர்ந்துகொண்டான்

தோழி
மூடிய  அறைக்கதவைத்   திறக்கச்  சொல்லிய
அதிகாலைக்கு  முன்பு
மணல்  வட்டமிட்டு
காதலை  அடைந்திருந்தாள்
அவளுடைய  அன்றைய  கனவில் .

No comments: