Wednesday 29 August 2012

காற்றில் மிதக்கும் துயரம் . . .



என்ன செய்வது
கரங்களில் மயங்கிச் சரிந்த மனதினை

என்ன செய்வது
மனதில் மயங்கிச் சரிந்த உடலினை

என்ன செய்வது
துயரத்தில் தோய்ந்த காதலை

ஒரு புன்னகை
அதற்கு ஈடான ஒரு சொல்
அல்லது
நெருக்கத்தை உணரவைக்கும்
ஏதேனும் ஒன்று

அன்பைப் பெற காத்திருக்கையில்
மௌனத்தின் ஊடே
கடந்து செல்கின்ற காற்றில்
மிதந்து கொண்டிருக்கிற காதல்
துயரமாக
கண்களில் வழிகிறது.

No comments: