Sunday 26 August 2012

இருள் விழிகள். . .




கண்களுக்கு எத்தனையோ பெயர்கள் இருக்கின்றன
கண்களுக்கு எத்தனையோ அர்த்தங்கள் இருக்கின்றன
மலர்களும் கண்கள் போலத்தான்
அர்த்தங்கள் நிரம்பியவை
கண்கள் மலர்ந்ததா
மலர்கள் விழித்தா என
நள்ளிரவில் சோதித்துக் கொண்டிருக்கிறார்கள்
மலர் மலரும்
கண்கள் திறக்கும் என்றபோதும்
தகுதியுள்ளவர் யார்
தகுதியற்றவர் யார் என
கண்களுக்கும் தெரியாது
மலர்களுக்கும் தெரியாது

அவை மூடிக் கிடக்கையில்.

No comments: