இது அறுவடைக் காலம்
உறக்கத்தையும்
வியர்த்த தன்
உடலையும்
விதையோடு
விதைத்தவள்
அதிகாலையிலேயே
வயல்நிலம் கிளம்புகிறாள்
பகலும் இரவும்
நிலத்தில்
பயிர்களோடு
காய்ந்து
கறுத்து
மினுங்குமவள்
முதல்
விளைச்சலைக் கையிலெடுக்கையில்
தன் உடலின்
முதல் திறப்பின் வலியும் பரவசமும் அடைந்தாள்.
%
Courtesy : Painting -Fernando Amorsolo
No comments:
Post a Comment