முத்தங்களினால்
வாழ்வைக்
கண்டடைய முடியுமென
நம்புகிற அவளிடத்தில்
பருகத்தகுந்த
நீர் சேகரமாகி
காதலால்
தளும்புகிறது
உயிர் அதிரும்
இசை
விரல்களைக்கொண்டவனுக்கு
தன் இசைமையைப்
பரிசளிக்க
இரவைத்
தேர்கிறாள்
அவன் வெகு
தொலைவில்
நடுவே
பெருங்கடல்
அவளின்
நீர்க்கால்கள் நிலத்தை நனைத்து
கடல் சேர்கிறது .
%
No comments:
Post a Comment