Saturday 23 June 2012

கடலை அறிந்தவள்





கடலை
மௌனம் என்றுதான் நினைத்திருந்தாள்

பேரிரைச்சலைத்
தரும் அலைகள்கூட
பெரும் மௌனம் என்பதாகத்தான்
நம்பிக்கொண்டிருந்தாள்

கடல்
பெரும் சப்தமிடுவதாக
ஒற்றைக்குரலில்
சொல்லிக் கொண்டிருந்தார்கள்
அவளிடம்

அலைகளால்
நனைந்த மணற்பரப்பில்
நிலத்தினை அளவிட்டுக் கொண்டிருக்கிறாள்
கடலின் கதையினைக் கேட்டபடி
சிறுமி

அவள்
பிரபஞ்ச மொழியை
அலைகளின் ஓசையில் புரிந்துகொண்டு
வீடு திரும்பினாள்
கடலை அறியாதபடியும் அறிந்தபடியும் .

No comments: