Thursday 28 June 2012

சில நாட்கள் . . .



சில நாட்கள் வருவது ஏன் என்பது
எனக்கொரு பெரிய கேள்விக்குறி
இந்தச் சில நாட்களை
என் பால்யத்தில் சந்திக்கவேயில்லை
சுற்றித் திரிந்தேன்
மரம் ஏறினேன்
பச்சைக் குதிரை விளையாடினேன்
இன்னும்
எத்தனையோ விளையாட்டுக்கள்
விளையாடிக் களித்தேன்
அப்பொழுதெல்லாம்
இந்தச் சில நாட்களைக் கடந்ததேயில்லை
ஒரு சூரிய உதயத்தில்
பள்ளி வகுப்பறையில்
அமர்ந்திருந்தபோது
நான்
ஏதோ ஒரு வலியை உணர்ந்தத் தருணத்தில்
சக மாணவன்
லைட் சிகப்பா எரியுது என்றான்

அன்றிலிருந்து சிலநாட்கள் வருகின்றன
வருகின்றன
வருகின்றன
ஆணாய் பிறந்திருக்கலாம் என்று
நினைக்கத் தோன்றும் 
அந்தச் சில நாட்கள்.

1 comment:

Ponnambalam kalidoss ashok said...

கவி தலைப்பு , மிகவும் ஆழமான அதே சமயம் கயிறு மேல் நடக்கும் வித்தை போன்றது..
கவி வார்த்தைகள் வழியாக , வேதனையுடன் உண்மை..
தவிர்க்க முடியா இயற்கை ...நாம் , புரிந்து கொண்டு, அரவணைப்பு கொண்டு மட்டுமே ,,,