Tuesday 26 June 2012

நட்பு . . .



அந்தப் பயணத்தில்
என்னருகில்   இருந்தாய்

பேசிக் கொண்டிருந்தோம்
சொற்களாலும்
மௌனத்தாலும்

உன்மேல்  சாய்ந்து  கொண்டேன்
நீ உணரா வண்ணம்

அப்பொழுது
உன்  இதயம்  துடித்துக்  கொண்டிருந்தது
என்  அண்மைக்காக

சொல்லிவிடத்தான்   விரும்புகிறேன்
உன்மீது  சாய்ந்து நாட்களாயிற்றென

என் விரைந்த  உடல்
ஆடைகளில்  மறைந்து  கொண்டிருப்பதை
அறிய  மாட்டாய்

உன்னிடம்  சொல்லிவிடும்   வரை
இந்தப்  பயணம்  நீண்டால்

சொல்லி  விடுவேன் .

1 comment:

Ponnambalam kalidoss ashok said...

நட்பின் பயணம் ,,எல்லோர்க்கும் இது போல் அமைந்துவிட்டால்..
பூவுலகு பயணம் சொர்க்கமே ..
நட்'பூக்கள்' மணம் நம்மை, கொள்ளை ...
உண்மை நட்பின் சாய்வு , 'கௌதமனின் ' ஞானம் பிறக்க...
நட்பு , சம அலையில் அமைந்திட்டால் ...பயணம் என்றும் சுகமே..