Tuesday 19 June 2012

தவம்


இன்று நீ என்னைப் பார்த்தே ஆக வேண்டும்
அல்லது நான்
இல்லையென்றால் நாம் காத்திருக்க வேண்டும்
குறைந்தது பன்னிரெண்டு ஆண்டுகள்
.
காலம் பற்றி
உன்னை விட நான் நன்கறிவேன்
.
காலம் சமரசமற்றது
மேலும்
அதனிடம் பேரம் பேச இயலாது
.
நான் தவம் செய்தேன் ஒன்றை அடைவதற்கு
இத்தனை காலமாக
.
நான் அடைந்தேன்
அடைந்தேனா என்று தெரியவில்லை
.
அப்பொழுது
அது என்னைக் கடந்திருந்தது
.
எனக்குக் காத்திருக்கவும் தெரியும்.

சக்தி ஜோதி

2 comments:

கல்விக்கோயில் said...

வாழ்த்துக்கள், வாழ்க, வளர்க.

Arul said...

வாழ்த்துக்கள், கவிதை என் போன்ற சாமானியனுக்கும் புரியும் படி எழுதுங்க்ள்...