Saturday 8 September 2012

மண்வாசனை

 
 
நூறாயிரம் வீரர்கள் தொடரச்
சென்றிருக்கிறாய்
குதிரைகளோடும்
யானைகளோடும்
வீரர்கள்
வாட்களையும் வேல்களையும்
ஏந்தி பின் தொடர்கிறார்கள்
உன் உடல் கவசங்களால்
பாதுகாக்கப்பட்டிருக்கிறது
உன் கண்களில்
நிலத்தின் மீதான வெறி சுடர்கிறது
புழுதியால் காற்று நிரம்புகிறது
எதிரிகளின் நிலம் அதிர்கின்றன
நான் அறிவேன்
நீ விரும்பிய நிலத்தை வென்று திரும்புவாய் என
உனது நிலத்தில்
உன்னுடையவள்
மண்வாசனை பூக்க விரிந்திருக்கிறாள்
மழையற்று
வறண்ட நிலம் பிளந்திருக்கிறது
இந்த மண்வாசனை
நீ நுகர்கையில்
இந்த நிலத்தின் சுனை பெருகத்தொடங்கும்

அதில் பேச மறந்த நாம்
மிதந்து கொண்டிருப்போம்.

No comments: