Thursday 20 September 2012

சிறை மீட்டல். . .



மண்கலயங்களின் சிறிய துவாரங்களின் வழி
தங்கள் உலகை
மெல்ல மெல்ல எட்டிப்  பார்த்தன  சில பறவைகள்

மஞ்சள் 
பச்சை
நீலம்
இன்னும் பல வண்ணங்களில்
கூண்டினுள் பறவைகள்
காப்பிச்செடியின்
காய்ந்த  கிளைகளில்
காதலை  பரிமாறிக்கொண்டிருந்தன

வெயிலும்
பனியும்
கம்பிகளைக்  கடந்து  உள்நுழைகிறது

கூண்டுக்  கம்பிகள்
மண்கலயங்கள்
காப்பிக் கிளைகள்
பறவைகளை
பருந்துகளிடமிருந்து  பாதுகாக்கின்றன

பறவைகளின் இருப்பினை
வாசனையால்  உணர்ந்துகொள்ளும் பூனைகள்
எங்கிருந்த  போதிலும்
அவைகளை   அச்சப்படுத்திக்கொண்டேயிருந்தன

உயிரின்  வாதையை  படபடக்கும் சிறகுகள்
அறிவதில்லை
ஒருபோதும்  கூண்டுப் பறவையை
பூனையால் பிடித்துவிட இயலாதென்பதை .

No comments: