Tuesday 6 August 2013

தீபங்களின் நடுவே . . .



ஆயிரம் தீபங்களுக்கு நடுவே
ஒரு தேவதையைக் கண்டிருக்கிறான்
அவளது விழிகளை
சுடரெனச் சொல்லி
நாணங் கொள்ளச் செய்திருக்கிறான்
பட்டுடையில் மின்னியவாறு
புன்னகை பூத்தவளை
உறவென்று அறிமுகப்படுத்தினார்கள்
அதற்குப் பிறகு
திருவிழாக்களும்
தேரோட்டமும்
பூப்பல்லக்கும்
வருடந்தோறும் வந்து போகிறது அவளில்லாமல்
தூண்களில் மறைந்து கைவளையல் குலுக்கிச் சிரிப்பவள்
இப்போது சிற்பமென
ஆயிரம் தீபங்களின் நடுவே

வெற்றிடத்தில்

விளக்கொன்று அணைந்து
திரி கருகும் வேளையும்

விளக்கொன்று சுடர்விட்டு
ஒளிரும் வேளையும்

அருகருகே .

No comments: