ஒரு அதிகாலைப்பொழுதில்
பெண்கள் கோலமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்
அது
அடர்மழைபொழியும் காலமாகவும் இருந்தது
முன்பொரு அதிகாலை
அவள்
அப்போதுதான் கோலமிட்டு திரும்பியிருக்க
மழைபொழிந்து கலைத்துக் கொண்டிருந்தது
இருள் விலகியிராத அந்தப் பொழுதில்
வேலையாய்ச் சென்றவன்
இன்னமும்
திரும்பியிருக்கவில்லை
வரைந்த கோலங்களைக் கலைப்பதும்
கலைந்து கிடக்கும் புள்ளிகளை இணைப்பதுமான
விளையாட்டில்
அவனுடனிருந்த அதிகாலை
ரகசியங்கள்
அவள் மனத்திலிருந்து வெளியேறி
வண்ணப்பொடியில் சேகரமாகிறது
பெரும்மழை கலைத்திடாத
வண்ணங்களை
சுமந்து கொண்டிருக்கிறது கோலம்.
Courtesy: Luana Sacchetti

No comments:
Post a Comment