நீலமும் இன்னபிற நிறங்களும்
கடலும்
வானமும்
நீலமல்ல
நம் மனம் நிகழ்த்தும்
மாய மென்பதை
நுரைத்த
அலைகளும்
கருத்த
மேகமும்
உணர்த்த
மண்ணில்
காணும்
நிறமெல்லாம்
நிஜமல்ல
அவை
கண்ணின் கற்பிதங்களென
ஓசையின்றி
ஒலிக்குமொரு
குரல்
உள்ளிருந்து உரைத்திடும்
அழுத்தமாக.
**
1 comment:
மனம் நிகழ்த்தும் மாயம்
கண்ணின் கற்பிதங்கள்
அமையான வரிகள்👌🏼
சிறப்பு.💐
Post a Comment